தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமி, 12 நாள் போராட்டத்திற்குப் பிறகு மரணம்!

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தீ  வைத்து எரிக்கப்பட்ட 16 வயது தலித் சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

News image
கோப்புப்படம்
Updated On :19 செப்டம்பர் 2022, 10:22 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தீ  வைத்து எரிக்கப்பட்ட 16 வயது தலித் சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி 16 வயது தலித் சிறுமியை இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அவர் மீது டீசல் ஊற்றி உயிருடன் எரிக்க முயற்சித்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட சிறுமி மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 12 நாள்களுக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த வழக்கில், சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இருவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

லக்னெளவில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சிறுமியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.