நாட்டின் உயரமான அம்பேத்கர் சிலை: தெலங்கானா முதல்வருக்கு ஸ்டாலின் வாழ்த்து!

நாட்டின் உயரமான அம்பேத்கர் வெண்கல சிலையை தெலங்கானாவில் நிறுவிய திறந்து வைத்ததற்காக தெலங்கான முதல்வருக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
நாட்டின் உயரமான அம்பேத்கர் சிலை: தெலங்கானா முதல்வருக்கு ஸ்டாலின் வாழ்த்து!
Published on
Updated on
1 min read

நாட்டின் உயரமான அம்பேத்கர் வெண்கல சிலையை தெலங்கானாவில் நிறுவிய திறந்து வைத்ததற்காக தெலங்கான முதல்வருக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில் அவரது 125 அடி வெண்கல சிலையை திறந்து வைத்த தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ்-க்கு பாராட்டுகள்.

புத்தர் சிலைக்கும் தெலங்கானா தலைமைச் செயலகக் கட்டடத்துக்கும் இடையே சமத்துவத்தின் மாபெரும் அடையாளமாக அம்பேத்கரின் சிலையை நிறுவிட வேண்டும் என்ற எண்ணம் சாலப் பொருத்தமானது, பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com