இது சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல – சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கும் திருமணம். இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டும் என்று சொன்னால், நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் - நம்முடைய அழகு தமிழக்கு, செந்தமிழுக்கு, நம்முடைய தாய் மொழிக்கு – ‘செம்மொழி‘ என்கிற அங்கீகாரம் பெற்று தந்திருக்கிறாரே, அந்த அங்கீகாரத்தோடு – தமிழ் மொழியில் - சீர்திருத்த வகையில் - சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கும் திருமணம், இந்த திருமணம். எனவே அப்படிப்பட்ட இந்த திருமணத்தில் எல்லோரும் இன்றைக்கு மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.