தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு தில்லி செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றான, சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.
சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் குடியரசுத் தலைவர் கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. திமுகவின் முக்கிய திட்டங்களாகப் பார்க்கப்படும் இவற்றுக்கு, குடியரசுத் தலைவரை அழைத்து திறப்பு விழாவை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவருக்கு முறைப்படி அழைப்புவிடுக்க வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் தில்லி செல்கிறார்.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உள்ளிட்டோரை முதல்வர் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.