கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 7:14 am

DIN

தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றான, சென்னை, கிண்டி பன்நோக்கு அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவுக்குத் தயாராகி உள்ளது. மேலும், திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

திமுகவின் முக்கிய திட்டங்களாகப் பார்க்கப்படும் இவற்றின் திறப்பு விழாவிற்கு  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்கத் திட்டமிட்டிருந்தது. 

அதன்படி, இன்று காலை தில்லி புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.