மனதின் குரல் நிகழ்ச்சி 23 கோடி மக்களால் ரசிக்கப்படுகிறது: அண்ணாமலை

மனதின் குரல் நிகழ்ச்சி 23 கோடி மக்களால் ரசிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

மனதின் குரல் நிகழ்ச்சி 23 கோடி மக்களால் ரசிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒவ்வொரு மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையும், எனது அருமை நாட்டு மக்களே என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தன் உரையைத் தொடங்கும் மனதின் குரல் நிகழ்ச்சி 23 கோடி மக்களால் ரசிக்கப்படுகிறது.
 காணொளி தொடர்புகள் கன்ணிமைக்கும் நேரத்தில் கிடைக்கும் இக்காலக் கூட்டத்தில், வாணொலி மூலம் மக்களை வசீகரித்து, வாகை சூடிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நூறாவது மன் கி பாத் நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது. 100வது முறையாக மனதின் குரல் ஆக தமிழில் மலர இருக்கிறது. 
 ஒரே நேரத்தில், நாடு முழுவதும் பல கோடி மக்களால் பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியை, தமிழக பாஜக சார்பில் ஒவ்வொரு மாவட்டந்தோறும், ஒவ்வொரு மண்டல் தோறும், கிளை அளவில் அனைவரும் காணும் வகையில், மக்களின் மனம் கவர்ந்த மன் கி பாத் நிகழ்ச்சியின் ஒலி, ஒளிபரப்புகள், பாஜகவின் கார்யகர்த்தர்களால் விரிவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 இதுவரை உலகில் எந்த பிரதமரும், எந்த நாட்டின் தலைவரும், வானொலியின் வாயிலாக மக்களை சந்தித்ததில்லை. இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க அதிபர் 13 முறை வானொலியில் பேசியதே, இதுவரை சாதனையாக கருதப்பட்டது. புதிய சாதனையாக 99 முறை மக்களிடம் வானொலியில் உரையாற்றிய நம் பாரத பிரதமர், நாளை 100வது முறையாக மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்ற இருக்கிறார். 
 சாமானியர்களின் சாதனையை, மக்களின் கருத்தை, விருப்பத்தை, மக்களுக்காக வெளிப்படுத்தும் மகத்தான நிகழ்ச்சி மன் கி பாத். நூறாவது மன் கி பாத் நிகழ்ச்சியில் நம் பாரத பிரதமர் நாட்டு மக்களுக்கு விடுக்க இருக்கும் செய்தியை கேட்பதற்காக, நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com