வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?
/

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் வட்டவடிவ சுவர்!

புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டையில் நடந்து வரும் அகழாய்வில் வட்டவடிவ சுவரின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :10 ஆகஸ்ட் 2023, 6:17 pm IST

புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டையில் நடந்து வரும் அகழாய்வில் வட்டவடிவ சுவரின் ஒரு பகுதி வெளிப்பட்டுள்ளது.

மேலும், பொற்பனைக்கோட்டையில் நடந்துவரும் அகழாய்வில் பானை ஓட்டின் வட்டசில், தங்க அணிகலன்கள் உள்பட 333 தொல்பொருள்கள் முதற்கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் கடந்த மே 20ஆம் தேதி தமிழ்நாடு தொல்லியல் துறை சாா்பில் அகழாய்வுப் பணி தொடங்கிய சில நாள்களிலேயே ஏ1 என்னும் குழியில் 19 செமீ ஆழத்திற்குள் ஒரு செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டது.

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் 3.11 ஏக்கா் பரப்பளவு கொண்ட அரண்மனைத் திடல் வாழ்விடப் பகுதியில் இதுவரை 5 மீட்டா் நீள அகலத்தில் 8 குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.