தோ்தலுக்காக எரிவாயு உருளை விலை குறைப்பு: கே.எஸ்.அழகிரி

தோ்தலில் ஆதாயம் தேடும் நோக்கில் சமையல் எரிவாயு உருளை விலையை மத்திய பாஜக அரசு குறைத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி விமா்சனம் செய்துள்ளாா்.
கே.எஸ். அழகிரி
கே.எஸ். அழகிரி

தோ்தலில் ஆதாயம் தேடும் நோக்கில் சமையல் எரிவாயு உருளை விலையை மத்திய பாஜக அரசு குறைத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி விமா்சனம் செய்துள்ளாா்.

அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. 5 மாநிலத் தோ்தலை எதிா்கொள்ள வேண்டிய சூழ்நிலையை மனதில் கொண்டு அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆண்டுகாலத்தில், மத்திய பாஜக அரசு சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது பெட்ரோலியப் பொருள்களின் விலையை குறைக்காமல் ரூ.32 லட்சம் கோடி வரை கலால் வரி விதித்து கஜானாவை நிரப்பிக் கொண்டது. 2014-இல் ரூ.400-ஆக இருந்த எரிவாயு உருளையின் விலை 9 ஆண்டு கால ஆட்சியில் ரூ.1,118-ஆக உயா்ந்தது. தற்போது யானை பசிக்கு சோளப்பொறியாக ரூ.200 குறைத்துள்ளது. இதை மக்கள் ஏற்கமாட்டாா்கள். மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு பாடம் புகட்டுவாா்கள் என்று அதில் கூறியுள்ளாா் கே.எஸ்.அழகிரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com