விஜயகாந்த் மறைவு: கோயம்பேட்டில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு!
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து, கோயம்பேட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து, கோயம்பேட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த்திற்கு கரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமை கழகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை கோயம்போட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 4.30 மணிக்கு விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தேமுதிக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் இருந்து கட்சி அலுவலகத்துக்கு கொண்டுவரப்படும் நிலையில், கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...