மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாழப்பாடி பகுதியில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

News image
வாழப்பாடி அருகே பழனியாபுரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை, சாலை தெரியாத அளவிற்கு காணப்பட்ட மூடுபனி.
Updated On :5 பிப்ரவரி 2023, 3:59 am

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. காலை 7.30 மணி வரை தொடரும் மூடுபனியால் வாகனங்கள் முகப்பு விளக்குடன் ஊர்ந்து செல்கின்றன.

Story image

வாழப்பாடி பகுதியில் 2022 இறுதிவரை பரவலாக பருவமழை பெய்தது. 2023 ஜனவரி மாதம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. தற்போது  பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையிலும், பனிப்பொழிவு குறையவில்லை. கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு மட்டுமின்றி, மூடுபனியும் படர்ந்து வருகிறது.

Story image

இதனால், காலை 7.30 மணி வரை வானம் சூரிய வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுகிறது. இதனால், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சாலையில் ஊர்ந்து செல்கின்றன. 

Story image

அதிகாலையில் மட்டுமின்றி, காலை 9 மணி வரை தொடரும்  மூடுபனியால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ - மாணவியரும், வேலைக்கு செல்வோரும் குறித்த நேரத்திற்குள் எழுந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாவதாகவும், இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களும், கடும் பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகளும் வேதனை தெரிவித்துள்ளனர்.

திடீரென வாழப்பாடி பகுதியில் இன்று காலை 9 மணி வரை ஏற்பட்ட மூடுபனியால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.