புதுமைப்பெண் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று(புதன்கிழமை) தொடக்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி தொடக்கி வைத்தார்.
இதன் மூலமாக தற்போது உயர்கல்வி பயிலும் 1.13 லட்சம் மாணவியர் இந்தத் திட்டத்தில் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுமைப்பெண் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.
இதன்பின்னர் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த புதுமைப்பெண் திட்டத்தினால் உயர்கல்வி சேர்க்கை 27% ஆக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சைனஸுக்கு தீர்வு...
பாட்டி வைத்தியம்...
கண்களை பாதுகாக்க...
சமையல்... சமையல்...: வடாம் வகைகள்!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


