ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி வாக்கு செலுத்துவதற்கு ஏதுவாக இம்முறை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் 80 வயதுக்கு மேற்பட்ட முதிய வாக்காளர்கள் 321 பேர், மாற்றுத்திறனாளிகள் 31 பேர் உள்ளனர். இவர்களின் வாக்குகளை பெற 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்கள் வாக்காளர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களிடம் தபால் வாக்குகளை பெறவுள்ளனர். இரண்டு நாள்களுக்குள் இந்த பணியை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கடலில் படகில் சுமாா் 60 நிமிஷங்கள் தீப்பந்தத்துடன் சிலம்பம் சுற்றி சாதனை

எரிவாயு உருளை தட்டுப்பாடு: திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சுவா் விளம்பரங்களை 24 மணி நேரத்திற்குள் அழிக்க வேண்டும்! - அரசியல் கட்சியினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

வெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்பு!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

