ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேனகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இறுதி கட்டப் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஈரோடு காவல் நிலையத்தில் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா உள்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 20-ஆம் தேதி அனுமதியினறி ஆலமரத் தெருவில் பிரசாரம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.