ஈரோட்டில் பிரசாரத்தை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஈரோட்டில் பிரசாரத்தை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக காங்கிரஸின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

இவரை ஆதரித்து தமிழக அமைச்சர்கள் கடந்த ஒரு மாதமாக பிரசாரம் மேற்கொண்டு வந்த நிலையில், பிரசாரத்தின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார்.

தற்போது சம்பத் நகரில் இளங்கோவனை ஆதரித்து பேசி வருகிறார். தொடர்ந்து காந்தி சிலை, பி.பெ.அக்ரஹாரம், முனிசிபல் காலனி, பெரியாா் நகரில் பிரசாரம் செய்யவுள்ளார்.

இன்று மாலை பிரசராம் முடிவடைந்தவுடன் கார் மூலம் கோவை விமான நிலையம் செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து சென்னை செல்ல உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com