மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

9 மணியைக் கடந்து வாக்குப்பதிவு... ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் தள்ளுமுள்ளு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இரவு 9 மணியைக் கடந்தும் ஒருசில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

News image
Updated On :27 பிப்ரவரி 2023, 3:49 pm

DIN


ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இரவு 9 மணியைக் கடந்தும் ஒருசில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, ரஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் அதிக அளவிலான வாக்காளர்கள் இருந்ததால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

வாக்குச்சாவடிகளில் மாலை 5.30 மணிக்கு மேல் வரிசையில் இருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு, வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.

நீண்ட நேரமாக வரிசையில் நிற்பதால், ஆத்திரமடைந்த பெண்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால், வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளுவாக மாறியது. 

இதனையொட்டி அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் வாக்காளர்களிடம் பேசி சமாதானப்படுத்தினர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருப்பதால், இரவு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வாக்குப்பதிவு நேரம் முடிந்து, டோக்கன் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் வாக்குச்சாவடியில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், மாலை 7 மணி நிலவரப்படி 74.69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.