கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரத்தில் கர்நாடக மாநில அரசு பேருந்து ஓட்டுநர் சிவராஜ் மாரடைப்பால் மரணம்! 

கர்நாடகம் மாநிலத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சிவராஜ் என்பவர் மாரடைப்பால், சிதம்பரத்தில் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய சிதம்பரம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

News image

உயிரிழந்த ஓட்டுநர் சிவராஜ்

Updated On :4 ஜனவரி 2023, 6:00 am

DIN

சிதம்பரம்: கர்நாடகம் மாநிலத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சிவராஜ் என்பவர் மாரடைப்பால், சிதம்பரத்தில் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய சிதம்பரம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கர்நாடகம் மாநிலம், சாம்ராஜ் நகர் கொள்ளக்கால் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ்(40).  இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார், கடந்த சில நாள்களுக்கு முன்பு 52 பயணிகளுடன் கர்நாடக அரசுக்கு சொந்தமான அரசு பேருந்துடன் சென்னை அருகே உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு புதன்கிழமை அதிகாலை வந்தனர். பின்னர், பக்தர்கள் மற்றும் ஓட்டுநர் சிவராஜ் சாமி தரிசனம் செய்துவிட்டு வாகனத்தை எடுக்க முயற்சி செய்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சிதம்பரம் நகர போலீசார் இறந்து போன சிவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சாமி தரிசனம் செய்துவிட்டு பேருந்து இயக்க முயற்சித்த போது மாரடைப்பு ஏற்பட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.