ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நீட் விலக்கு: மீண்டும் விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம்!

நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு தமிழக மருத்துவத்துறைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.

News image
Updated On :19 ஜனவரி 2023, 5:19 am

DIN

நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு தமிழக மருத்துவத்துறைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்தாண்டு நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசுக்கு அனுப்பினார்.

நீட் விலக்கு மசோதா குறித்து கடந்த ஆண்டே மத்திய சுகாதார அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்த நிலையில் தமிழக மருத்துவத்துறையும் மத்திய அமைச்சகத்திற்கு பதில் அளித்திருந்தது.

இந்நிலையில், ஆயுஷ் அமைச்சகத்தின் மூலம் தமிழக மருத்துவத்துறைக்கு நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய அரசு மீண்டும் விளக்கம் கேட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சட்டவல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து ஓரிரு வாரங்களில் தமிழக அரசுத் தரப்பில் மீண்டும் விளக்கம் அளிக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.