திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் சுரங்கப்பாதை பின்புறம் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
குடியிருப்பின் தரைதலத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பைகளில் பற்றிய தீ அங்குள்ள மின்மாற்றியில் பற்றிக் கொண்டதால் வேகமாக பரவி அருகே உள்ள இருசக்கர வாகனம் தீயில் கருகியது.
மேலும் தீ விபத்து நடந்தபோது அப்பகுதியில் இருந்த வயதான மூதாட்டி தீயணைப்பு துறையினரால் எவ்வித தீக்காயமும் இன்றி காப்பாற்றப்பட்டார்.
இதையும் படிக்க: பழனி மலைக் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரங்கள்
உடனடியாக குடியிருப்பு வாசிகள் அருகே உள்ள அண்ணாநகர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறைக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குரல் அழைப்பு தரத்தை மதிப்பிட மேம்பட்ட ‘மைகால்’ செயலி: ட்ராய் அறிமுகம்

தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்பு

நேபாளம்: மதக் கலவரத்தால் பாதித்த மாவட்டங்களில் திரும்பிய இயல்புநிலை

உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



