மேட்டூர் அணை: இன்று மாலை டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தம்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு சனிக்கிழமை மாலை முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு சனிக்கிழமை மாலை முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 896 கன அடியிலிருந்து வினாடிக்கு 933 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.  

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,000 கன வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.   

அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை 104.21அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 103.87 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 79.94 டி.எம்.சியாக உள்ளது.

சனிக்கிழமை மாலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com