இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஊழலை பற்றி பேச அமைச்சர் ரகுபதிக்கு தகுதி கிடையாது: எடப்பாடி பழனிசாமி

ஊழலை பற்றி பேச அமைச்சர் ரகுபதிக்கு தகுதி கிடையாது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 ஜூலை 2023, 11:21 am

DIN

ஊழலை பற்றி பேச அமைச்சர் ரகுபதிக்கு தகுதி கிடையாது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 2024 மக்களவைத் தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை அதிமுக தொடங்கிவிட்டது. பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகளை அதிமுக மேற்கொண்டு வருகிறது. ஆளுநர் ரவி ஏன் தில்லி சென்றார் என்பது பற்றி எனக்கு தெரியாது.

அதிமுக ஆட்சியில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. டிஐஜி விஜயகுமார் மரணம் குறித்து சிபிஐ மூலம் விசாரிக்க வேண்டும். காவலர் நலவாழ்வு திட்டத்தை அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும். மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு ஏன் அதிக பணி வழங்குகிறீர்கள்.

கோவை சரக டிஐஜி விஜயகுமாருக்கு 6 மாதம் மன அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் நடைமுறைக்கு வருமா என்பதே சந்தேகம். ஊழல் குற்றச்சாட்டு உள்ள ஒருவரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு உள்ளது. ஊழலை பற்றி பேச அமைச்சர் ரகுபதிக்கு தகுதி கிடையாது.

சட்ட அமைச்சர் ரகுபதி மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.