11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

திருப்பத்தூர் தண்டாயுதபாணி சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்!

திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தண்டாயுதபாணி கோயிலின் கும்பாபிஷேகம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2023, 2:41 pm IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தண்டாயுதபாணி கோயிலின் கும்பாபிஷேகம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள கற்பக விநாயகர், சக்தி மாரியம்மன், பொன்னியம்மன் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்  நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை அனுக்ஞை விக்னேஷ்வர  பூஜையுடன் தொடங்கி, வெள்ளி மற்றும் சனிக்கிழமை பல்வேறு ஹோமங்கள் தொடர்ந்து  நடைபெற்றது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. பின்னர், பரிவார பிரதான கலசங்கள் கோயில் வலம் வந்தது. தொடர்ந்து 

6.30 மணிக்கு கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம், 7 மணிக்கு சக்திமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம், 7.30 மணிக்கு பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர், காலை 10.30 மணியளவில் தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுர கலசங்கள் மீது தீபாராதனை செய்யப்பட்டு, மலர் தூவி புனித நீர் ஊற்றப்பட்டது.

அப்போது பக்தர்கள் அரோஹரா  என்று முழக்கங்கள்  எழுப்பினர். இதில், திரளான  பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.