மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருப்பத்தூர் தண்டாயுதபாணி சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்!

திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தண்டாயுதபாணி கோயிலின் கும்பாபிஷேகம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2023, 9:11 am

DIN

திருப்பத்தூர்: திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தண்டாயுதபாணி கோயிலின் கும்பாபிஷேகம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள கற்பக விநாயகர், சக்தி மாரியம்மன், பொன்னியம்மன் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்  நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை அனுக்ஞை விக்னேஷ்வர  பூஜையுடன் தொடங்கி, வெள்ளி மற்றும் சனிக்கிழமை பல்வேறு ஹோமங்கள் தொடர்ந்து  நடைபெற்றது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. பின்னர், பரிவார பிரதான கலசங்கள் கோயில் வலம் வந்தது. தொடர்ந்து 

6.30 மணிக்கு கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம், 7 மணிக்கு சக்திமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம், 7.30 மணிக்கு பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர், காலை 10.30 மணியளவில் தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுர கலசங்கள் மீது தீபாராதனை செய்யப்பட்டு, மலர் தூவி புனித நீர் ஊற்றப்பட்டது.

அப்போது பக்தர்கள் அரோஹரா  என்று முழக்கங்கள்  எழுப்பினர். இதில், திரளான  பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.