அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
தக்காளி மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வு குறித்து வேளாண்மைத் துறை, கூட்டுறவுத் துறை, உணவுத் துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்கு பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அத்தியாவசியப் பொருள்களின் கடத்தலை தடுக்க வேண்டும். குடிமைப் பொருள் குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிர நடவடிக்கை எடுத்து, அத்தியாவசியப் பொருள்கள் கடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனையை அதிகரிக்க வேண்டும். நடமாடும் காய்கறி அங்காடிகளை அதிகளவில் செயல்படுத்த வேண்டும். என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!