தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு: முதல்வர் ஆலோசனை

அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)

Updated On :10 ஜூலை 2023, 8:22 am

DIN

அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

தக்காளி மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வு குறித்து வேளாண்மைத் துறை, கூட்டுறவுத் துறை, உணவுத் துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக்கு பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அத்தியாவசியப் பொருள்களின் கடத்தலை தடுக்க வேண்டும். குடிமைப் பொருள் குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிர நடவடிக்கை எடுத்து, அத்தியாவசியப் பொருள்கள் கடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.  

உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனையை அதிகரிக்க வேண்டும். நடமாடும் காய்கறி அங்காடிகளை அதிகளவில் செயல்படுத்த வேண்டும். என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.