இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தான் பயின்ற பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் நிதி அளித்த சாலமன் பாப்பையா: சு. வெங்கடேசன் எம்.பி பாராட்டு!

மதுரையில் தான் பயின்ற மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார் பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா. 

News image
Updated On :23 ஆகஸ்ட் 2023, 11:50 am

DIN

மதுரையில் தான் பயின்ற மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார் பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா. 

பேராசிரியர் சாலமன் பாப்பையா, கடந்த 1941 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை மதுரை ஆரப்பாளையம் கிராஸ் சாலையில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளியில்  ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். 

தற்போது, இந்த பள்ளி பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். 
 
இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்த நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வகுப்பறை கட்டும் பணிக்காக ரூ.20 லட்சத்துக்கான காசோலையை மதுரை மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமாரிடம் சாலமன் பாப்பையா வழங்கினார்.

இதற்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் பாராட்டு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: 

தனக்குப் பயன்தந்து இன்பமூட்டிய கல்வியை வழங்கிய வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளி இன்னும் பல்லாண்டுகள் நீடித்துநின்று பலருக்கும் கல்விப் பயனை நல்க வேண்டும் என்று விழைந்து அப்பள்ளிக்கு 20 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ள தமிழறிஞர் ஐயா சாலமன் பாப்பையாவிற்கு நன்றியும் பாராட்டுகளும் என்று சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.