ராணிப்பேட்டை: சோளிங்கரில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு வாலிபர்கள் பலியாகினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே வாசவி திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தை சுற்றி உள்ள சுவற்றை இடித்துவிட்டு புதியதாக சுற்றுச்சுவர் கட்டும் பணி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிக்காக, சுவற்றை இடிக்கும் போது திடீரென சுவர் அடியோடு அதிகளவில் பெயர்ந்து கீழே விழுந்ததில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி, திருவள்ளூர் மாவட்டம் மகான் காளிகாபுரத்தைச் சேர்ந்த விஷ்வா என்கிற விசுவநாதன் (19), சோளிங்கர் மேல் வன்னியர் தெருவை சேர்ந்த வேலு (40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் சோளிங்கர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

பிளே ஆஃப்ஸ் போட்டிகளில் சொதப்பும் விராட் கோலி..! முற்றுப்புள்ளி வைப்பாரா?
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



