நெய்வேலி: கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் தடுப்பில் கார் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தை ஜெனிலியா, தந்தை அஜித், மனைவி மதுமிதா என 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்த மாமியார் தமிழ்செல்வி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதையும் படிக்க | கிருஷ்ணகிரியில் பட்டாசு கடையில் தீ விபத்து: 4 பேர் பலி
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.