கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியது!

கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியது.

News image
Updated On :5 ஜூன் 2023, 9:46 am

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியது.

கிருஷ்ணகிரி அருகே பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான ஓசூர்,  சூளகிரி மற்றும் கர்நாடகம்,  ஆந்திர மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்,  கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து மெல்ல அதிகரித்தது.

இந்த நிலையில்,  கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி ஆகும். கிருஷ்ணகிரி அணை 50 அடியை எட்டும் பொழுது  அணையின்  பாதுகாப்புக் கருதி,  அணையிலிருந்து,  தென்பெண்ணை ஆற்றில் கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படும் எனவும், இதனால்,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு, வெள்ளை அபாய எச்சரிக்கை விடுத்தார்.

இந்த சூழ்நிலையில்,  கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம்,  இன்று (ஜூன் 5), 50 அடியை எட்டியது.  இதையடுத்து, அணையிலிருந்து, தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை, 8 மணி நிலவரப்படி,  அணையின் நீர்வரத்து வினாடிக்கு 404 கன அடியாக இருந்தது.  அணையில் இருந்து வினாடிக்கு 12 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. 

தற்போது,  அணையின் நீர்மட்டம்,  50.50 அடியாக உயர்ந்ததை அடுத்து, வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.