/

மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தவிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜூன் 2023, 6:36 am

DIN

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தவிட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் கடந்த ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டது. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜூன் 14 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 

இந்நிலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தவிட்டுள்ளது.

இந்த சிறப்பு வகுப்புகள் மாலை 5 மணி அல்லது 5.30 வரை நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.