வருகிற மார்ச் 10 ஆம் தேதி அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாட்டினால் கட்சியினர் இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளனர். எனினும் மூத்த நிர்வாகிகள் பலரும் பழனிசாமிக்கு ஆதரவளிப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதிமுகவில் வருகிற மார்ச் 9 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 10 ஆம் தேதி அதிமுக தலைமை நிர்வாகிகள் குழு ஆலோசனை நடத்தவுள்ளது.
இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஆக்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கேரள தோ்தல்: சிபிஎம் வேட்பாளா்கள் அறிவிப்பு!தா்மடத்தில் முதல்வா் பினராயி போட்டி!
கடன் நெருக்கடியில் தமிழ்நாடு?

குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவா்களுக்கு சிலிண்டா் கிடையாது! இணைப்பை ஒப்படைக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தல்!
அடகு நகையை மீட்டுத் தருவதாகக்கூறி 33 பவுன், ரூ.25 லட்சம் மோசடி செய்தவா் கைது!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

