தமிழகத்தில் புதிதாக 40 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இன்று (மார்ச் 14) கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு 257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 2,690 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6.92 கோடி பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று புதிதாக 40 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 23 பேர். பெண்கள் 17 பேர்.
கரோனா தொற்றிலிருந்து 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 35, 57,008 அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.