கனிமொழிக்கு எதிரான மனு தள்ளுபடி

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றிக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
கனிமொழிக்கு எதிரான மனு தள்ளுபடி
Updated on
1 min read

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றிக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி. 

இந்நிலையில் இவரது வெற்றிக்கு எதிராக சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கனிமொழி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

ஆனால், மனுதாரரின் மனுவை நிராகரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார் கனிமொழி. 

அதன்படி மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com