தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 14-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 14-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,  

பாஞ்சாலங்குறிச்சியில் மே 12, 13 ஆகிய தேதிகளில் வீரசக்க தேவி ஆலய திருவிழா நடைபெற உள்ளது. ஆலய திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு ஊர்வலங்களுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது. 

சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி ஆம்னி பேருந்துகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வெளியூர்களுக்குச் செல்பவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com