தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு 33-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு டிஆர்பி ராஜா புதிதாக இடம்பெற்றுள்ளார்.
மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள டிஆர்பி ராஜா, தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | அமைச்சராக பதவியேற்றார் டி.ஆா்.பி.ராஜா!
இந்நிலையில், புதிய அமைச்சரவை குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு 33-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நாசர் 28-வது இடத்திலிருந்தார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்றபின்னர் அவருக்கு 10-வது இடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக முதல்வருடன் சேர்த்து 35 அமைச்சர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அமைச்சரான மகன் டிஆர்பி ராஜா! என்ன சொல்கிறார் டி.ஆர். பாலு?