இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ராணிப்பேட்டை மாவட்ட புதிய காவல் அலுவலகம்: முதல்வர் திறந்துவைத்தார்

vராணிப்பேட்டை மாவட்ட புதிய காவல் அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

News image
Updated On :19 மே 2023, 7:40 am

DIN

ராணிப்பேட்டை மாவட்ட புதிய காவல் அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் அதிக பரப்பளவு கொண்ட ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்,  வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டம் நிா்வாக ரீதியிலான செயல்பாடுகளை  கடந்த  2019 ஆம் ஆண்டு நவம்பர்  மாதம் 28- ஆம் தேதி தொடங்கியது.

Story image

இதையடுத்து பாரதி நகர் பகுதியில் ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிலையம் (ஐவிபிஎம் ) வளாகத்தில் ரூ.118.40 கோடி செலவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், ரூ.12.02 கோடி  மாவட்ட காவல் அலுவலகமும் கட்டும் பணி நடைபெற்று வந்தது. தொடர்ந்து புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகள்  நிறைவடைந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட புதிய காவல் அலுவலகம் ரூ.12.02 கோடி திட்ட மதிப்பீட்டில் கடந்த 7.7.2021  அன்று துவங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் அண்மையில் நிறைவடைந்தது.

Story image

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட புதிய  மாவட்ட காவல் அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொளிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை காலை திறந்து வைத்தார்.   

இதையடுத்து புதிய மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி, மாவட்ட எஸ்பி. டி.வி.கிரண் ஸ்ருதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினர். இதில் ஏடிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா, அரக்கோணம் ஏஎஸ்பி கிரீஷ் யாதவ் அசோக், ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.