75 சதவீதம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: அண்ணாமலை பேட்டி

தமிழ்நாட்டில் 75 சதவீதம் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள் விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 
75 சதவீதம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: அண்ணாமலை பேட்டி


கோவை: தமிழ்நாட்டில் 75 சதவீதம் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள் விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், காவல்துறையினருக்கு நேரத்திற்கு பதவி உயர்வு கிடைப்பதில்லை. கிரேடு 2 பதவியில் இருக்கும் காவல்துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்காதது கண்டிக்கத்தக்கது. காவல்துறையின் நலத்தை பார்க்க வேண்டும்.

காவல்துறையினரின் பதவி உயர்வு குறித்து டிஜிபி முதல்வரிடம் பேச வேண்டும். 

திமுக அரசு வந்த பின்னர், கமிஷன் அரசு கமிஷனுக்காக வேலை செய்கின்றனர். அமைச்சர்கள் வருமானத்தை ஈட்ட முடியுமா என்பதைத்தான் பார்க்கிறார்கள்.

சோலார் சப்சிடி கொடுப்போம் என திமுக அரசு தெரிவித்தது. ஆனால் எத்தனை வீட்டிற்கு கொடுத்துள்ளார்கள். எத்தனை பேருக்கு லஞ்சம் இல்லாமல் இணைப்பு கொடுத்துள்ளார்கள். 

தமிழ்நாட்டில் 2021-22, 22-23 ஆம் ஆண்டில் 22 சதவீதம் மது விற்பனை அதிகரித்துள்ளது. மது குடிப்பவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் 75 சதவீத டாஸ்மாக்குகளை மூட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கள் விற்பனை செய்ய வேண்டும். கள் விற்பனையில் வருமானத்திற்கு வழி உள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் கள்ளால் எப்படி வருமானத்தை ஈட்டி கொடுக்க முடியும் என்பது வெள்ளை அறிக்கையில் உள்ளது.

வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்த பிறகு விழுப்புரத்தில் மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டில் மக்கள் மத்தியில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். விழுப்புரத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் மாநாடு நடைபெறும்.

1985-க்கு பின்னர் கர்நாடகத்தில் ஆளுங்கட்சி திரும்ப ஆட்சிக்கு வந்ததில்லை. அங்கு பாஜகவின் மீதுள்ள சலிப்புத்தன்மையால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரசின் இலவசம். இலவசத்தில் மூன்று மாற்றத்தை கொண்டு வந்துள்ளார் சித்தராமையா.

தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளியிட்டு விட்டு வேறு செய்கின்றனர். அறிக்கையையே மாற்றிவிட்டனர்.

பாஜக அரசு பொருளாதாரமான நாட்டை கொடுத்து சென்றுள்ளதால் கர்நாடகாவில் பட்ஜெட் நன்றாக இருக்கும். பாஜக அரசு நடத்தியதை வைத்துதான் பட்ஜெட் போடுகிறார் சித்தாராமையா.

ரூ.2,000 நோட்டு புழக்கத்தில் இல்லை. ரூ.2,000 நோட்டு வைத்துள்ளவர்கள் பதுக்கி வைத்திருப்பவர்கள். ரூ.2,000 நோட்டால் கொள்ளையடித்தவர்களுக்கு தான் பிரச்னை.

கேள்விகள் கேட்டால் ஐயாயிரம் கடைக்கு போனாயா என பத்திரிக்கையாளர்களை கிண்டல் செய்கின்றனர். இதற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். உதயநிதி ஸ்டாலின் எத்தனை நாள் தப்பிப்பார். சின்ன குழந்தையை போன்று கோச் செய்கிறார். எத்தனை நாள் தப்பித்து செல்வார் என்று பார்ப்போம். 

2024 தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு தான் பாஜகவிற்கு வந்தேன்.தொண்டனாக வேலை செய்வேன். 2024 தேர்தலில் தில்லி அரசுக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை. தேர்தலில் நிற்பவர்களின் வெற்றிக்காக பாடுபடுவேன். 

தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல விருப்பமில்லை. இந்த மண்ணில் எனது அரசியல் இருக்க வேண்டும் என விரும்புகின்றேன் என்று அண்ணாமலை கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com