தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

சோளிங்கர் கோயிலில் ரோப்கார் சேவை: அமைச்சர் சேகர்பாபு 

கார்த்திகை மாத இறுதிக்குள் சோளிங்கர் கோயிலில் ரோப்கார் சேவை தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

News image

அமைச்சர் சேகர்பாபு

Updated On :1 நவம்பர் 2023, 6:34 pm IST

கார்த்திகை மாத இறுதிக்குள் சோளிங்கர் கோயிலில் ரோப்கார் சேவை தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்குட நன்னீராட்டு விழாவில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ரோப்கார் சேவைகளை பொருத்தவரை திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயில்களில் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

கார்த்திகை மாத இறுதிக்குள் சோளிங்கர் கோயிலில் ரோப்கார் சேவை தொடங்கப்படவுள்ளது. அதேபோல், அய்யர் மலை ரோப்கார் சேவையும் ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

வயதானவர்கள் மலைச் சார்ந்த கோயில்களுக்கு செல்ல தேவையான வசதியை இந்து சமய அறநிலையத்துறை செய்து கொண்டிருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.