/

மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ.14) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :13 நவம்பர் 2023, 1:59 pm

DIN

மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ.14) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகி இருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை அறிவித்து இருந்தது.

கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறையை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.