சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 2 நீதிபதிகள் நாளை மாலை பதவியேற்கவுள்ளனர்.
அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி விவேக் குமாா் சிங், தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி எம். சுதீா் குமார் ஆகியோர் சென்னை உயா்நீதிமன்றத்துக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இரு புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கபுர்வாலா பதவிப் பிராமணம் செய்து வைக்கவுள்ளார்.
புதிய நீதிபதிகளின் பணியிட மாற்றத்தால் காலி பணியிடம் 9 ஆக குறைந்துள்ளது. இதனால் சென்னை உயர் நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.