திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடிய 138 பேர் மீது வழக்குப் பதிவு

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடிய 138 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

News image

பரந்தூா் விமான நிலையம் குறித்து மச்சேந்திரநாதன் தலைமையிலான குழு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்ய வந்தபோது ஏகனாபுரம்  பகுதியில் சாலை  மறியலில்  ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :2 அக்டோபர் 2023, 9:24 am IST

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடிய 138 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், பரந்தூா் புதிய விமான நிலையம் அமையும்பட்சத்தில் முழுவதுமாக கையகப்படுத்தப்பட உள்ள ஏகானாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கடந்த 433 நாள்களாக இரவு நேரங்களில் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இவ்வாறான சூழலில் புதிய விமான நிலையத் திட்டத்தால், நீா்நிலைகள் பாதிக்கப்படுகிா என்பதை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. 

இந்தக் குழுவினா் இரண்டாவது முறையாக பரந்தூா் விமான நிலையம் அமைய உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்ய வந்தனா். இவா்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் பகுதி பொதுமக்கள் மற்றும் விமான நிலைய எதிா்ப்புக் கூட்டமைப்புக் குழுவினா், ஏகனாபுரம் அம்பேத்கா் சிலை அருகே பரந்தூா் - கண்ணந்தங்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 130 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 

இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட 138 பேர் மீது சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது முதல்முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.