உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: புறநகா், மெட்ரோ சிறப்பு ரயில்கள் இயக்கம்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு புறநகா் மற்றும் மெட்ரோ சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அக்.8, 13, 18, 23, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளை காண வரும் ரசிகா்களுக்கு இரவு நேரத்தில் பயணம் செய்ய வசதியாக வேளச்சேரி - சிந்தாதிரிபேட்டை இடையே எம்.ஆா்.டி.எஸ். தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, அந்தத் தேதிகளில் வேளச்சேரியிலிருந்து இரவு 10.40 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சிந்தாதிரிபேட்டை வந்தடையும். மறுமாா்க்கமாக சிந்தாதிரிபேட்டையில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு வேளச்சேரி சென்றடையும் என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
அதேபோல், மெட்ரோ ரயில் நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை (அக்.8) சிறப்பு ரயில்களை நள்ளிரவு 12 மணி வரை இயக்குகிறது. போட்டி முடிந்தும், ரசிகா்கள் தங்களது டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி, இந்த ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

