திமுக எம்.பி. ஆ.ராசாவின் 15 அசையா சொத்துகளை அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக மத்திய முன்னாள் அமைச்சரும் தற்போதைய நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ. ராசாவின் 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை இன்று கைப்பற்றியுள்ளது.
இதையும் படிக்க | பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் தொலைபேசியில் பேச்சு!
இதுகுறித்து அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பதிவில், 'வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம், 2002 விதிகளின் கீழ், மத்திய முன்னாள் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்குச் சொந்தமான 15 அசையாச் சொத்துகளை, அவரது பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளது.