தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

சிறை நூலகங்களுக்கு 1,500 புத்தகங்களை வழங்கினார் முதல்வர்!

தனக்கு பரிசாக வந்த புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள சிறை நூலகங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

News image
தனக்கு பரிசாக வந்த புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள சிறை நூலகங்களுக்கு வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
Updated On :28 அக்டோபர் 2023, 9:47 am

DIN

தனக்கு பரிசாக வந்த புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள சிறை நூலகங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தன்னை சந்திக்க வருபவர்கள் அளித்த புத்தகங்களில் 1,500 புத்தகங்களை இன்று (சனிக்கிழமை) தலைமைச் செயலகத்தில் சிறைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள சிறை நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 2018-ஆம் ஆண்டு பொறுப்பேற்றது முதல், தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைகளை தவிர்த்து, அறிவியக்கம் உருவாக்க புத்தகங்களை வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

அதனையொட்டி, இதுவரை தனக்கு அளிக்கப்பட்ட சுமார் இரண்டு லட்சம் புத்தகங்களை தமிழ்நாடு மற்றும் அயலகத்தில் வாழும் தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று, அவர்களின் நூலகங்களுக்கு முதல்வர் வழங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள சிறைவாசிகளிடையே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், அவர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காகவும், அவர்களின் மனதில் நற்சிந்தனைகளை விதைக்கும் விதமாக, மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் உள்ள பார்ஸ்டல் பள்ளி ஆகியவற்றில் சிறை நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நூலகங்களில், பலவகையான புத்தகங்கள், பல்வேறு வகையான செய்தித்தாள்கள், வார/மாத இதழ்கள் வைக்கப்பட்டுள்ளன.   

முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகளில் முதன்முறையாக சிறைத்துறை பங்கேற்று, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் சிறை நூலகங்களுக்கு நன்கொடையாக பெற்றுள்ளது. மேலும், அனைத்து சிறைகளிலும் உள்ள சிறை நூலகங்களை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு 2023-2024 ஆம்  ஆண்டில்  2 கோடியே 8 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.

மேற்படி சிறை நூலகங்களில், புத்தகங்களின் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாகவும், சிறைவாசிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்விற்கு இப்புத்தகங்கள் பேருதவியாக அமையும் என்பதை கருத்தில் கொண்டும், தனக்கு வழங்கப்பட்ட 1,500 புத்தகங்களை சிறை நூலகங்களுக்கு முதல்வர் இன்று நன்கொடையாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை  அமைச்சர் எஸ். இரகுபதி, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, இ.ஆ.ப., சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை துணைத் தலைவர் ஆர். கனகராஜ்  ஆகியோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.