தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தேனி அரசு மருத்துவமனையில் அமைச்சரின் திடீர் ஆய்வால் தெரிய வந்த உண்மை

அமைச்சா் மா.சுப்பிரமணியன் நடத்திய திடீர் ஆய்வின்போது, நோயாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஸ்கேன் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

News image
Updated On :7 செப்டம்பர் 2023, 12:09 pm

DIN


தேனி அரசு மருத்துவமனையில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நடத்திய திடீர் ஆய்வின்போது, நோயாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஸ்கேன் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு இலவசமாக ஸ்கேன் எடுப்பதைத் தவிர்த்துவிட்டு, தலா ஒரு நோயாளியிடமிருந்து ரூ.2,500 பெற்றுக் கொண்டு ஸ்கேன் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கும் மையத்துக்குச் சென்ற அமைச்சர், அங்கு ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போதுதான், 7 நோயாளிகளிடமிருந்து தலா ரூ.2500 பெற்றுக் கொண்டு ஸ்கேன் எடுத்தது தெரிய வந்தது.

உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுத்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன்  தனியார் ஸ்கேன் நிறுவனம், ஸ்கேன் எடுப்பதற்கான பணிக்காக செய்திருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் புதிய எம்ஆர்ஐ பரிசோதனை இயந்திரம் வாங்கி, இலவசமாக சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவர்களிடம் அமைச்சர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.