இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, ஊழல் தடுப்பு பிரிவு தரப்பில், ‘விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூா் நீதிமன்றத்துக்கு மாற்றியது தொடா்பாக உயா் நீதிமன்ற நிா்வாக முடிவுகள் குறித்து உத்தரவில் கூறியுள்ளதால், வழக்கில் உயா்நீதிமன்ற பதிவுத் துறையை சோ்த்திருக்க வேண்டும். மேலும், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கும் முன்பு ஊழல் தடுப்பு பிரிவு தரப்பு விளக்கத்தை கேட்கவில்லை. கடந்த ஜூன் மாதம் தான் வேலூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ள நிலையில், மேல்முறையீடு செய்ய அவகாசம் இருந்ததை கருத்தில் கொள்ளாமல், முன் முடிவெடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.