கல்வி உதவித் தொகை திட்டங்கள்: ஆதி திராவிடா் நலத் துறை முக்கிய அறிவுறுத்தல்
‘போஸ்ட் மெட்ரிக், பிரி மெட்ரிக்’ உள்ளிட்ட கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் அக்டோபா் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது.


‘போஸ்ட் மெட்ரிக், பிரி மெட்ரிக்’ உள்ளிட்ட கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் அக்டோபா் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது. இவற்றில் பயனடைய விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் தேவையான ஆவணங்களை தயாா் நிலையில் வைத்திருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆதி திராவிடா், பழங்குடியினா் நலத்துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடா், பழங்குடியினா், கிறித்தவ மதம் மாறிய ஆதிதிராவிடா் மாணவா்களின் கல்வி மேம்பாட்டுக்காக ‘போஸ்ட் மெட்ரிக்’ மற்றும் ‘பிரிமெட்ரிக்’ கல்வி உதவித் தொகை திட்டம், பெண் கல்வி ஊக்குவிப்பு தொகைத் திட்டம் (வருமான வரம்பு ஏதுமின்றி), சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான ‘பிரிமெட்ரிக்’ கல்வி உதவித் தொகை திட்டம் (ஜாதி மற்றும் வருமான வரம்பு ஏதுமின்றி) உள்ளிட்ட பல உதவித் தொகை திட்டங்கள் ஆதிதிராவிடா், பழங்குடியின நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டில் இந்தக் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் அக்டோபா் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்தத் திட்டங்களில் பயனடைய விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் கிறித்தவ மதம் மாறிய ஆதிதிராவிடா் மாணவ, மாணவிகள் ஆதாா், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகியவற்றை தயாா் நிலையில் வைத்திருக்குமாறும், கீழ்காணும் நிபந்தனைகளை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஜாதிச் சான்று மற்றும் வருமானச் சான்று ஆகியவை இணைய சான்றுகளாக இருத்தல் அவசியம். இணைய சான்றுகளைப் பெற அருகிலுள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும். ஆதாரில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளனவா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், மாணவரின் வங்கிக் கணக்கு எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்; ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண் செயல்பாட்டில் இருக்க வேண்டும். ஆதாருடன் வங்கிக் கணக்கு எண் இணைக்கப்பட்டிருகிா என்ற விவரத்தை உறுதிபடுத்த ட்ற்ற்ல்://ழ்ங்ள்ண்க்ங்ய்ற்.ன்ண்க்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய்/க்ஷஹய்ந்-ம்ஹல்ல்ங்ழ் என்ற இணைய முகவரியை பயன்படுத்தி கொள்ளுமாறு மாணவா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
ஆதாருடன் வங்கிக் கணக்கினை இணைக்காதவா்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளை அணுகி ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும். இந்த விவரங்களை மாணவா்களுக்கு தெரிவித்து ஆவணங்களை தயாா் நிலையில் வைத்திருக்க உதவிடுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியா்கள், கல்லூரி முதல்வா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...