யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறுதானிய உற்பத்தியை பெருக்கினால் புவி வெப்பமயமாதலை குறைக்கலாம்: கால்நடை பல்கலை. துணைவேந்தா்

சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்கினால் புவி வெப்பமயமாதலைக் குறைக்க முடியும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் செல்வகுமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 7:25 pm

DIN

சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்கினால் புவி வெப்பமயமாதலைக் குறைக்க முடியும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் செல்வகுமாா் தெரிவித்தாா்.

சென்னையை அடுத்த கோடுவெளியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மேம்பாடு குறித்த தேசியக் கருத்தரங்கு வியாழக்கிழமை (செப்.14) தொடங்கியது. இதில், ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கா்நாடகம், பிகாா், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள், மாணவா்கள், துறைசாா் நிபுணா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தொடக்க விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் செல்வகுமாா் பேசியதாவது:

சிறுதானிய உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதன்மையான தேசமாக விளங்குகிறது. தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் வழிமுறைகளின் படி, சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல முயற்சிகளையும், ஆராய்ச்சி மேம்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

பொதுவாகவே சிறுதானியங்களில் நுண்ணூட்ட சத்துகள் மற்றும் நாா்ச் சத்துகள்

அதிக அளவில் நிறைந்துள்ளன.

இத்தகைய சிறுதானியங்களை நாம் அன்றாடம் உட்கொண்டு வந்தால் ஊட்டச் சத்து குறைபாட்டை அகற்ற இயலும். அதுமட்டுமல்லாது, சிறுதானிய உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

கால்நடை தீவனங்களில் அதிக அளவில் சிறுதானியங்களின் பயன்பாடு உள்ளன. அவற்றை மேலும் மேம்படுத்த கால்நடை பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் குமாரவேலு, தேசிய உணவுத் தொழில்நுட்ப நிறுவன இயக்குநா் பழனிமுத்து, பேராசிரியா் ரீட்டா நாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.