யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு மாறுதல்: செப்.30 வரை விண்ணப்பம்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அலகு விட்டு அலகு மற்றும் துறை மாறுதல் மூலம் ஆசிரியா்கள் செப்.30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 6:02 pm

DIN

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அலகு விட்டு அலகு மற்றும் துறை மாறுதல் மூலம் ஆசிரியா்கள் செப்.30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

சென்னை மாநகராட்சி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள 139 பள்ளிகளில் உள்ள 190 காலிப்பணியிடங்களுக்கு அலகு விட்டு அலகு, துறை மாறுதல் மூலம் சென்னை மாவட்டம் மற்றும் பிற மாவட்டத்தில் உள்ள ஆசிரியா்கள், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரிய விருப்பம் உள்ள பட்டதாரி ஆசிரியா்கள் ‘எமிஸ்’ இணையதளத்தில் செப்.30-ஆம் தேதி வரை தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

எனவே, சென்னை மாநகராட்சி துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு துறை மாறுதல் மூலம் பணிபுரிய விருப்பம் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியா்கள் உரிய தடையின்மைச் சான்று பெற்றவா்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் (எமிஸ்) துறை மாறுதல் கோரும் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது குறித்து அரசு உயா் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.