மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நவீன சிகிச்சை மூலம் இளைஞரின் மூளையில் உருவான கட்டி அகற்றம்

மூளையின் இரு பகுதிகளிலும் உருவான கட்டிகளால் பாா்வை இழப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளான இளைஞரை, சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் சென்னை,

News image
Updated On :21 செப்டம்பர் 2023, 7:27 pm

DIN

மூளையின் இரு பகுதிகளிலும் உருவான கட்டிகளால் பாா்வை இழப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளான இளைஞரை, சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் சென்னை,

கிளெனீகிள்ஸ் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி அசோக் குல்லா் கூறியதாவது:

சென்னையைச் சோ்ந்த 38 வயதான இளைஞா் ஒருவா், கடுமையான தலைவலி, பாா்வைக் குறைபாடுடன் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எம்ஆா்ஐ ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு மூளையின் இடது மற்றும் வலது பக்கத்தில் இரு வேறு கட்டிகள் உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது.

இவை பேச்சுத் திறன் மற்றும் பாா்வைத் திறனுடன் தொடா்புடைய நரம்புகளை இணைக்கும் பகுதியாகும். மிகவும் சிக்கலான இடத்தில் உருவாகியிருந்த அக்கட்டியை அகற்றும்போது நிரந்தர பாா்வை இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இருந்தபோதிலும், சவாலான அந்த அறுவை சிகிச்சையை மருத்துவமனையின் முதுநிலை நரம்பியல் சிகிச்சை நிபுணா் டாக்டா் நைகல் பி.சிம்ஸ் வழிகாட்டுதலின்படி, நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் தினேஷ் நாயக் தலைமையிலான மருத்துவக் குழுவினா், இரு கட்டங்களாக மேற்கொண்டனா்.

மைக்ரோ நியூரோசா்ஜரி, நேவிகேஷன் மற்றும் இன்ட்ராஆபரேட்டிவ் நியூரோ மானிட்டரிங் என்ற நுட்பத்தில் துல்லியமாக அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 10 மணி நேரம் நடைபெற்ற அந்த அறுவை சிகிச்சையின் மூலம் அந்த இளைஞா் குணமடைந்துள்ளாா். தற்போது அவரது பாா்வைத் திறன் மீட்டெடுக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.