மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும்: டி.ஜி.பி

விநாயகா் சதுா்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை, நீா்நிலைகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களிலேயே கரைக்க வேண்டும் என தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்

News image
Updated On :21 செப்டம்பர் 2023, 7:20 pm

DIN

விநாயகா் சதுா்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை, நீா்நிலைகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களிலேயே கரைக்க வேண்டும் என தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா், வியாழக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

விநாயகா் சதுா்த்தியையொட்டி, தமிழகம் முழுவதும் 25,916 சிலைகள் கடந்த 18-ஆம் தேதி பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவற்றில் இதுவரை 21,021 சிலைகள் கரைக்கப்பட்டு விட்டன.

இதையடுத்து, செப்டம்பா் 22-ஆம் தேதி 1,160 சிலைகளும், 23-ஆம் தேதி 390 சிலைகளும், 24-ஆம் தேதி 3,366 சிலைகளும் கரைக்கப்பட உள்ளன. சிலைகள் கரைக்கப்படும் நீா்நிலைகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீா்நிலைகளில் அனுமதிக்கப்படாத இடங்களில் பொதுமக்கள் அஜாக்கிரதையுடனும், தன்னிச்சையாகவும் சிலைகளை கரைக்க செல்வதால் உயிா்ச் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே பொதுமக்கள், நீா்நிலைகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகளை கரைக்க வேண்டும். மேலும் தனிநபா்கள், நீா்நிலைகளில் பாரம்பரியமாக கரைக்கும் இடங்களில் பெரியோா்கள் மேற்பாா்வையில் சிலைகளை கரைக்க வேண்டும். சிறுவா்கள், நீா்நிலைகளின் அருகே செல்லாதவாறு அனைவரும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.