பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஈரோடு கிழக்கு: பாஜக 2  நாள்களில் முடிவு!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து பாரதிய ஜனதா கட்சி இன்னும் இரண்டு நாளில் முடிவெடுக்கும் என்று கட்சியின் மாநில துணைத்தலைவர் மற்றும் முன்னாள் எம்பி கே.பி. ராமலிங்கம் கூறினார். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:16 am IST

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து பாரதிய ஜனதா கட்சி இன்னும் இரண்டு நாளில் முடிவெடுக்கும் என்று கட்சியின் மாநில துணைத்தலைவர் மற்றும் முன்னாள் எம்பி கே.பி. ராமலிங்கம் கூறினார். 

ஈரோடு பாஜக கட்சி அலுவலகத்தில் அவர் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். முன்னதாக அவர்   செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

இந்த இடைத்தேர்தலில் திமுக ஆதரவு பெற்ற வேட்பாளரை தோற்கடிப்பதற்கான வியூகம் வகுக்க இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஊழலுக்கும் தவறான செய்கைகளுக்கும் அங்கீகாரம் கொடுத்தது போல் ஆகும். எனவே பாஜக அதற்கான முற்றுப்புள்ளி வைக்கவும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்று கருதுகிறது. 

திமுகவை விழுத்தும் சக்தி பாஜகவுக்கு மட்டுமே உள்ளது. அதிமுகவை சேர்ந்த இரண்டு அணி தலைவர்களும் பாஜக ஆதரவை கூறியுள்ளனர்.  ஓபிஎஸ் பாஜகவிற்கு ஆதரவு தருவேன் என்று கூறியுள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை இன்னும் இரண்டு தினங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார். அதிமுகவின் இரண்டு அணிகளும் சேர்ந்து கூட போட்டியிடலாம். இரட்டை இலை கிடைக்குமா? கிடைக்காதா? என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொருத்தது. எங்களை பொறுத்தவரை திமுகவை விழ்த்த அனைத்து சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும். 

அதிமுக இரண்டு அணிகள் ஒருங்கிணைப்பதற்கு பாஜக ஒன்றும் சமரசம் செய்யாது. நேற்று உதயநிதி ஸ்டாலின், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு பாஜகவை சந்தித்ததை குறிப்பிட்டு எதற்காக அவர்கள் கட்சி நடத்துகின்றனர் என்று கூறியுள்ளார். அவரது தாத்தா கருணாநிதி வாஜ்பாய் இடம் நட்புக் கொண்டு அமைச்சரவிலேயே இடம் கேட்டு பெற்றார்.

முரசொலி மாறன் ஆறு மாத காலம் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றது கூட வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்த போதுதான் இதை உதயநிதி மறக்கக்கூடாது.  எதற்காக ஆளுநர் மசோதாவில் கையழுத்திடவில்லை என்பதை அண்ணாமலை விளக்கி உள்ளார். 

சர்சைக்குரிய பல மசோதாக்கள் உள்ளன. அதில் ஒன்று தனியார் கல்லூரிகளை அரசுடைமையாக்குவது. அண்ணாமலைக் கூறிய பிறகு தான் அது பற்றி தெரியவந்தது. கட்சித் தலைவர் அண்ணாமலை, பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலைத்துறையை கலைப்போம் என்று கூறியது கோயில்களில் நடைபெறும் ஊழல்களை கண்டித்து தான்.

தைரியம் இருந்தால் பழனி, திருச்செந்தூர் போன்ற புகழ்வாய்ந்த கோயில்களின் வருமானம், செலவினம் என வெள்ளை அறிக்கை வெளியிடட்டும். பக்தி குழுக்களிடம் கோயில்கள் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் பாஜக நிலைப்பாடு. முடிந்தால் தனி பட்ஜெட் திருக்கோவிலில் சம்பந்தமாக போடலாம். கோயில்கள் வேண்டாம் என்பதல்ல எங்கள் நிலைப்பாடு என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.