சென்னை- திருப்பதி இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலை வருகிற ஜூலை 7 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடக்கிவைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் கடந்த 2018ல் தயாரிக்கப்பட்டு 2019ல் தில்லி - வாராணசி இடையே முதல் ரயில் இயக்கப்பட்டது. தற்போது 24 மாநிலங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னை - மைசூரு, சென்னை - கோயம்புத்தூர் இடையே என இரு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அடுத்ததாக சென்னை- திருப்பதி இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ரயிலை வருகிற ஜூலை 7 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடக்கிவைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் நான்காவதாக சென்னை- நெல்லை இடையே ஒரு ரயில் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.